சஹசர பேருந்து சீர்திருத்தங்கள் திகன மற்றும் கடுகண்ணாவ பாதைகளில் ஆகஸ்ட் 2018 முதல் CPTSA ஆல் 48 பாதைகள் மற்றும் 350 தனியார் பேருந்துகளை உள்ளடக்கி நடத்தப்பட்டது. இந்த திட்டம் பின்வருவனவற்றின் மூலம் பேருந்துகளின் செயற்பாடுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது:
இந்த திட்டத்தின் மூலம், பயணிகளுக்கு தரமான சேவை உறுதி செய்யப்படுகிறது மற்றும் பேருந்து உரிமையாளர் மற்றும் பேருந்து ஊழியரின் தொழில்முனைவோர் மனநிலை மாற்றப்படுகிறது. இதன் விளைவாக, பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் அதிக கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள் மற்றும் ஆபத்தான சாரத்தியத்தில் ஈடுபட எந்த காரணமும் இருக்காது.
தங்கள் பேருந்துகள் சரியான நேரத்தில் இயங்குவதையும், பேருந்துகளில் வசதியாக அமரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையை மட்டுமே ஏற்றிச் செல்வதையும், அவர்களின் சௌகரியத்தில் அக்கறை காட்டுவதையும் உறுதி செய்வது பேருந்து ஊழியர்களின் பொறுப்பாகும். இத்தகைய சேவைத் தரத்தின் உத்தரவாதமானது, தனியார் வாகனங்களைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் அன்றாடப் பயணங்களுக்கு பொதுப் போக்குவரத்திற்குத் திரும்புவதை உறுதிசெய்கிறது, இதனால் பொதுப் பேருந்துச் சேவைகளின் வருமானம் அதிகரிக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், சஹசர திட்டம் என்பது பொதுப் போக்குவரத்தில் ஒரு பாரிய புரட்சியாகும்.
இந்த முன்னோடித் திட்டம் CPTSA இன் பாரிய ஆதரவுடன் 2018 இல் செய்யப்பட்டது, இப்போது அரசாங்கம் அந்த திட்டத்தை நாடு முழுவதும் செயற்படுத்த முடிவு செய்துள்ளது.